புரிந்திருக்க வாய்ப்பில்லை!
அவர்களுக்குப் புரிந்து கொள்ள கொடுப்பிணை இல்லை!
மனதை நெகிழச் செய்திடும்
உன் வல்லமையை உணர முடியா
மனிதர் தமக்கு விளக்கம் எதற்கு?
நீ நீயாக இருத்தலில் பெருமை கொள்ளும்
மானிடர் இன்னும் பிறக்கத்தான் செய்கின்றனர்!
அழகு என்று உரைக்கையில் உணரும்
இனிமைக்கு நீ முன்னோடி..
உனக்குப் பின்னே மற்றவை எல்லாம்!!
நீ தமிழர்களின் சுவாசம்...
தமிழே,
இம்மி குறையாமல் அன்று முதல் இந்நொடி வரை
அமுதம் தெளிக்கும் உன்னை அனுபவிக்க
புண்ணியம் புரிந்திருக்க வேண்டும்...
தெரியாதவர் தமிழர் அல்ல...
தன் தரத்தினை முழுமையாய் அனுபவிகாதவர்!
இனிய தாய்மொழி தின நல்வாழ்த்துகள் :-)