Saturday 22 September 2012

என் வீட்டு பால்கனியும் நட்சத்திரமும்

கூனிக் குறுகி கிடக்கும்
மனமே...
கலங்காதே....
கடந்து போன நொடிகள் போல
இந்த வினாடி சுமந்து இருக்கும்
இந்த சுமையை
எதிரே வரும் நிமிடங்கள்
அழைத்துப் போய் விடும்...
மனிதர் காயம் தருவர்...
காலம் மருந்து தரும்..
இன்று எனக்கு பிடித்தமானது...
என் வீட்டு பால்கனியும்...
நட்சத்திர வானமும்...
தூரமாய் இருந்தாலும்
என்றென்றும் துணையாய் உள்ளது...

Tuesday 4 September 2012

நான் ஒரு மனிதன்!





பேனா முனைதனில்
கண்ணீர் கசிய
பதிவு செய்து கொண்டிருக்கின்றேன்
மெழுகுவர்த்தியின் தியாகந்தனை!
உணர்ப்பூர்வமாய் நான் எழுத

உருகிக் கொண்டிருக்கின்றது
மெழுகுவர்த்தி ஒன்று பட்டப்பகலினில்!
ஏனெனில்,
நான் ஒரு மனிதன்!