ஒற்றை வயிறு எனக்கு
உன்னைப் போல்!!
ஆனால்,
வற்றிக் கிடக்கு என் எலும்போடு!!!
கரிமலவாயு உண்டோ
என் உடம்பில்?
கேட்டுக் கொண்டதுண்டு
நானே என்னிடம்!!
ஏனெனில்,
மூக்கினூடே நுழையும்
பிராண வாயு
வயிற்றுக்கு செல்லும்
பாதை மூடிக் கிடப்பதைக் கண்டு
வெளியேறி விடுமோ?
மனிதன் என்ற பெயரன்றி
வேறெதுவும் எனக்கில்லை!!
எனக்கான உணவையும் சேர்த்தே
உண்டு விடுகிறார்கள் யாரோ
இப்புவிதனில்!!
விரயமாகும் ஒவ்வொரு
சோற்றுப்பருக்கையிலும் என் பெயர்
எழுதி அழிக்கப்பட்டு விட்டது!!!
Tuesday 10 April 2012
Friday 6 April 2012
காதல்
வார்த்தைகளில் அடங்கி விடாது
என் காதல்.
அடங்கி விடும் எனில்
வானத்தின் எல்லை
மூன்றெழுத்தில் முடிந்து விடும்!
என் காதல்.
அடங்கி விடும் எனில்
வானத்தின் எல்லை
மூன்றெழுத்தில் முடிந்து விடும்!
ஒரு மரணத்தோடு...
ஒரு மரணத்தோடு மரணிக்கின்றது,
கேட்கப்படாமல் போன மன்னிப்பும்
சொல்லப்படாமல் போன காதலும்!
கேட்கப்படாமல் போன மன்னிப்பும்
சொல்லப்படாமல் போன காதலும்!
ஒற்றைப் புள்ளி...
ஒரு புள்ளியில் தொடங்கும் உறவு
சில சமயங்களில் வேறொரு புள்ளியில்
முடிந்து விடுகின்றது.
புள்ளியின் நீளத்திற்குள்
உறவின் ஆழம்.
சில சமயங்களில் வேறொரு புள்ளியில்
முடிந்து விடுகின்றது.
புள்ளியின் நீளத்திற்குள்
உறவின் ஆழம்.
ஏதோ ஒரு....
ஏதோ ஒரு பாடலில் நம் வாழ்க்கை
அடங்கி விடுகின்றது;
ஏதோ ஒரு கவிதையில்
நம் மனம் புரிந்து விடுகின்றது:-)
அடங்கி விடுகின்றது;
ஏதோ ஒரு கவிதையில்
நம் மனம் புரிந்து விடுகின்றது:-)
பதிலான கேள்வி!!
கேள்வியுடனே எழுந்து
கேள்வியுடனே உறங்கிடும்
இந்த வாழ்க்கையின் பதில்
கேள்வியிலேயே முடிந்து விடுகின்றது!
கேள்வியுடனே உறங்கிடும்
இந்த வாழ்க்கையின் பதில்
கேள்வியிலேயே முடிந்து விடுகின்றது!
Subscribe to:
Posts (Atom)