Wednesday 21 March 2012

தினம் ஒரு விடியல் என் வானிலே!

           என் வாழ்வில் தவறாமல் நிகழும் ஒரு சம்பவம் விடியல். உறக்கம் கலைந்து என் விழிகளைத் திறந்தவுடன் விடிந்து விடுகிறது என் வானம். ஒவ்வொரு விடியலும் வெவ்வேறான மனோபாவங்களுடனே விடிகின்றது! ஆசைகளும் எதிர்ப்பார்ப்புக்களும் தழும்ப, கனவினை மறுத்து ஏங்கி தவித்த விடியல்கள் உண்டு.. சுமையான நிஜங்களைத் தூர எறிந்து விட்டு கனவுகளில் ஒளிந்து கொண்ட விழிகள் ஏற்க மறுத்த விடியல்களும் உண்டு! கண்களில் ஓரம் ஒட்டிக் கொண்டிருந்த உறங்கங்களில் விடிந்தும் விடியாத விடியல்கள் உண்டு. எந்த வகை விடியல் என்றாலும் தவறாமல் என் வாழ்வில் நிகழும் ஒரு சம்பவம் விடியல்.

No comments:

Post a Comment