Saturday 22 September 2012

என் வீட்டு பால்கனியும் நட்சத்திரமும்

கூனிக் குறுகி கிடக்கும்
மனமே...
கலங்காதே....
கடந்து போன நொடிகள் போல
இந்த வினாடி சுமந்து இருக்கும்
இந்த சுமையை
எதிரே வரும் நிமிடங்கள்
அழைத்துப் போய் விடும்...
மனிதர் காயம் தருவர்...
காலம் மருந்து தரும்..
இன்று எனக்கு பிடித்தமானது...
என் வீட்டு பால்கனியும்...
நட்சத்திர வானமும்...
தூரமாய் இருந்தாலும்
என்றென்றும் துணையாய் உள்ளது...

3 comments:

  1. பயணங்கள் சுமையாக இருந்தாலும் அதை சுகமானதாக மாற்றுகிறது இரவும் நிலவும் அதை அழகாக வர்ணித்துள்ள தங்களின் வார்த்தைகள் அற்புதமானவை .,
    வாழ்க்கை பயணம் எந்த விதத்தில் அமைந்தாலும் அதை ரசனை மனதோடு ரசிக்கிற மனம் நிம்மதியாக வாழ்க்கை பயணத்தை மேற்கொள்கிறது .,

    அருண்.இர

    ReplyDelete