Tuesday 12 June 2012

நான் மனிதன் அல்ல;ஈழத்தமிழ்ப் பெண்

மண் தன் மடி மேல்
தாங்கி நிற்கும் என்னைப்
பரந்து விரிந்த வானம்
அணைத்துக் கொள்கிறது
தன் நீல நிற போர்வையில்....
... ஏனெனில்,
நிர்வாணமாய்க் கிடக்கிறேன்
நான் பூமிப் பந்தில்!!
மெல்ல ஒழுகிக் கொண்டிருக்கிறது
உதிரங்களினூடே எனதுயிர்!!!
மண் முழுதும் சிதறிக் கிடக்கு
எனது பெண்மை!
பூப்பெய்த கணமும்
கற்பிழந்த நொடியும்
நினைவில் இல்லை எனக்கு!
ஏனெனில்,
வெறி பிடித்த மிருகங்கள்
குதறிப் போட்ட மிச்சம்
நான்!!
வலி என்ற சொல்- இன்று
என்னுள் வலிமையற்றதாகி விட்டது!!
காலடித்தடங்களும் எள்ளி நகையாடும்
குரல்களும் கேட்கின்றது!!
பெண்ணென்றால் அணைத்து
மோகத்தினைத் தீர்த்துக் கொண்டிருப்பர்!
ஈழத்துதமிழ் பெண்ணென்பதால்
என்னைக் கிழித்துத்
தன் வெறியைத் தீர்த்துக் கொண்டனர்.
வழிந்து கிடக்கும் என் கற்பினை
மிதித்துக் களிக்கின்றனர்.
மரணம் கூட என்னை
அணு அணுவாய் ரசித்துக்
கொல்கிறது!!!
விழி நீர் ஒன்று கசிகின்றது
ஈழத்தமிழரின் நிலைக் கண்டு!
உடைகளற்ற நிராயுதபாணியாய் நிற்கும்
என்னைப் பார்த்துத் தூரத்தில்
நாய் ஒன்று ஓலமிடுகின்றது!!
நான் மனிதன் அல்ல
ஈழத்தமிழ்ப் பெண்!!
"

13 comments:

  1. ஈழ நிலம் வீழ்ந்துபோன பின்னும்
    வீர நிழல்கள் மீண்டும் தோன்றுமடி...
    உன் போன்ற பெண்களால் ~
    அகங்கார நாய்கள் விரைவில் சாயுமடி...

    ReplyDelete
    Replies
    1. காய்ந்து கிடக்கும் உதிரங்களின் கறையை எப்படி போக்குவது? :-(

      Delete
  2. மரணம் கூட என்னை
    அணு அணுவாய் ரசித்துக்
    கொல்கிறது!!!

    ReplyDelete
  3. வலி...மெய்...மனம் வலிக்கத்தான் செய்கிறது "வலி என்ற சொல்- இன்று
    என்னுள் வலிமையற்றதாகி விட்டது!! ..

    ReplyDelete
    Replies
    1. வலியென்ற சொல் மட்டுமல்ல நாமும் வலிமையற்ற கோழைகளாய்தான் வேடிக்கை பார்த்திருக்கின்றோம்!

      Delete
  4. Replies
    1. கழுகுகள் பாவம்! மனிதனுடன் ஒப்பிடாதீர்! பிணங்களுக்குள் கழுகுகளின் உணவென்பது நியதி! ரசித்துக் கொல்லும் மனிதனை மிருகத்துடன் ஒப்பிடாதீர்!

      Delete
  5. கண்களில் கண்ணீர் துளி கட்டுபடவில்லை இதை படிக்கையில்- நாங்கள் செய்த குற்றம் தான் என்ன தமிழனை பிறந்தந்தைதவிர

    ReplyDelete
    Replies
    1. மன்னித்து விடுங்கள்! உங்களின் கேள்விக்குக்கூட பதில் சொல்ல முடியவில்லை! நான் கோழை! துரோகி! உங்களின் கண்ணீரைத் துடைக்க வலிமையற்று விரல்களை இறுகிக் கொண்டு வாழும் மாபெரும் கோழை!! முடிந்தால் எரித்து விடுங்கள்! தமிழர்கள் கொடூரமான முறையில் சாகடிக்கப்பட்ட நொடிகளில் கைக்கட்டி வேடிக்கை பார்த்த என்னை எரித்து விடுங்கள்!

      Delete
  6. "பெண்ணென்றால் அணைத்து
    மோகத்தினைத் தீர்த்துக் கொண்டிருப்பர்!
    ஈழத்துதமிழ் பெண்ணென்பதால்
    என்னைக் கிழித்துத்
    தன் வெறியைத் தீர்த்துக் கொண்டனர்"

    இந்த 4 வரிகள் ஈலத்தமிழ் பெண்களீன் மரண ஓலமாய் கேட்கிரது..

    ReplyDelete