Tuesday, 12 June 2012

மீண்டும் ஒரு முறை

மீண்டும் ஒரு முறை...
அந்த இளவேனிற்காலம்
வேண்டும் மீண்டும் ஒரு முறை....
தரையை மறந்து
சிறகுக் கட்டி வானில் பறந்த
அந்த பருவம்
வேண்டும் எனக்கு
மீண்டும் ஒரு முறை...
கடந்த காலமும்
மரணமும் ஒன்றென்று
உணர்ந்த பின்னும்
ஏங்கும் இந்த மனம்
உண்மையாய் வாழத் துடிக்கிறது
மீண்டும் ஒரு முறை...

No comments:

Post a Comment