Sunday 24 June 2012

விதிவிலக்கு

தினம் ஒரு காயம்..
அதில் புன்னகை விதிவிலக்கு...
தினம் தாங்கொண்ணா பசி..
அதில் உணவென்பது ஒரு விதிவிலக்கு..
தினம் துளி துளியாய் போகும் உயிர்..
அதில் வாழ்வென்பது விதிவிலக்கு...
இவ்வகை வாழ்வுண்டு மனிதர் பலருக்கு..
அதில் நாம் விதிவிலக்கு...

No comments:

Post a Comment