Thursday 5 July 2012

வாழ்க்கை ஒரு மெதுநடை.





இன்று,
வாழ்க்கை என்பது
விரைவுப் பேருந்து பயணம்.
விழிமூடி திறப்பதற்குள்
செலவழிந்து போகும்
பல மணி நேரம்...

நாளை என்ற கனவிற்காக
நரபலிகொடுக்கப்படும்
நிஜமான நிகழ்காலம்..
இந்த வாழ்க்கையின் பயணம்
முடிவுறும் இடம் நம் மரணம்....

அப்படியெனில்,
வாழ்க்கை என்பது என்ன?
"வாழ்க்கை"
ஓர் அழகான பயணம்..
இந்த பயணத்தின் குறிக்கோள்
சென்றடையும் இடம் அல்ல...
பயணிக்கும் ஒவ்வொரு நொடிதான்
இந்த வாழ்க்கையின் தத்துவம்...

ரசித்து நிதானமாய்
கடக்கும் வினாடிகள் இதயத்தை
வாழ வைக்கும்
சுகமான நினைவுகள்..

வாழ்க்கை ஒரு தென்றல்..
விழி மூடி அனுபவியுங்கள்..

வாழ்க்கை ஒரு பூங்கா
மகிழ்ச்சியுடன் நுகருங்கள்..

வாழ்க்கை ஒரு கவிதை
இன்றாவது ரசித்து படியுங்கள்...

வாழ்க்கை என்பது
ஒரு மெதுநடை..

காலாற நடந்து
காட்சிகளை ரசித்து
இளகிய இதயத்தோடு
நிறைவான நினைவுகளைச்
சுமந்து செல்வோம் நாமும்
ஒரு மெதுநடை..

அன்புடன்,
கோகிலா கன்னியப்பன்.

3 comments:

  1. மிகவும் அருமை

    ReplyDelete
  2. ரசிப்பவர்களுக்கு அது ஒரு மெதுவடை :)

    remove word verification from ur blog comments!

    ReplyDelete