Wednesday 18 January 2012

வெகு தூரத்தில் நீ!

நீதானா? இது நிஜம்தானா?
வியப்புக்குறியாகி நிற்கிறேன்!
சில நிஜங்கள் நம் கற்பனைகளுக்கு
அப்பாற்பட்டது!!
உயிரின் மரணம் நிச்சயம்
என்பது எனக்கு தெரியும்..
ஆனால்,
உயிரோடு இருக்கையில்
என் உணர்வுகள் மரிக்கின்றதே!!
இனி, என் ஆயுளின் ஆழம்
நீதான் என நான் நினைத்திருக்கையில்
அது வெறும் ஆயுள் தண்டனையாய்
மாறி என்னைப் பரிகசிக்கின்றதே!
நம் திருமண பந்தம்
தூய காதலில் இணைந்தது என்று
நான் களித்திருக்கையில்
தட்டி எழுப்பி
உச்சந்தலையில் ஓங்கி அடித்து
கூறி விட்டாய்
"காமம் கலைந்து விட்டதென்று"!
உன் மனதிற்குள் இன்று
வேறு ஒரு பெண்ணின்
சுவாசம் துடிப்பதாய்
என்னிடமே கூறுகின்றாய்.
அது சுவாசம் அல்ல
வெறும் காமப் பசி என்று
எனக்கு தெரியும்.
அந்த பெண்ணுக்கு?
திருமணமானவன் என்று தெரிந்தும்
உன் மேல் மையல் கொண்ட
அந்த பெண்ணுக்கு மட்டும்
காதலின் அர்த்தம் புரிந்து விடுமோ?
நிர்கதியாய் நிற்கிறேன்
ஆனால்,
தூய்மையானவளாய் உண்மையானவளாய்
நிற்கிறேன்.
தர்மமும் என் உண்மைக் காதலும்
என்னை காக்கும்.
நாளை உனக்கும் புரியும்
காமம் கடந்த பின் தாங்கி பிடிக்க
சத்தியம் காக்கும் மனையாள்
வேண்டும் என்று!
அன்று,
தூரத்தில் தெரியும் நிலவு
வெறும் எட்டாக் கனியாகி விடும்.

No comments:

Post a Comment