Tuesday 31 January 2012

என் கோபத்திலும் கொஞ்சம் கவிதை கிடக்கு!!

சில பொழுதுகளில் வறண்டு போகும்
என் கவிதைகள்.
தேடி தேடி பார்த்து
வார்த்தைகள் கிட்டாமல்
மெளனத்தில் கூட
கவிதைகள் வடித்திருக்கிறேன்.
இருண்ட இதயம் துவண்டு கிடக்கையில்
எழுத மனமின்றி
வழிந்தோடிய கண்ணீரில்
ஓராயிரம் கவிதைகளை
கசிய விட்டிருக்கிறேன்.
இன்பம் சூழ்ந்து கொள்ளும்
கணங்களில்
புன்னகையினூடே பல கவிதைகளை
இறைத்திருக்கிறேன்.
கவிதை என்பது
வெறும் எழுத்தின் வடிவம் அல்ல.
உணர்வுகளின் உச்சம்.
என் கோபத்திலும்
கொஞ்சம் கவிதை கிடக்கு!!

No comments:

Post a Comment