Tuesday 31 January 2012

உன்னோடு எனக்கு ஒரு வாழ்வு வேண்டும்

உன் இதழோர புன்னகை போதும்.
உன் தோள் சாய்ந்து
ஓர் உறக்கம் வேண்டும்.
உன் விரல் சேர்த்து
மெது நடை போக வேண்டும்.
உன் பார்வைதனில்
கொஞ்சம் முகம் சிவக்க வேண்டும்.
என் கண்ணீர் மண்ணைத் தொடும் முன்னமே
உன் கை அதை தாங்கி பிடிக்க வேண்டும்.
என்றாவது ஒரு நாள்
எனக்கு மரணம் வேண்டும்.
அன்று உன் அணைப்பினில்
என் ஜனனம் முடிவுற வேண்டும்.

No comments:

Post a Comment