Tuesday 10 April 2012

ஒற்றை வயிறு எனக்கு!

ஒற்றை வயிறு எனக்கு
உன்னைப் போல்!!
ஆனால்,
வற்றிக் கிடக்கு என் எலும்போடு!!!
கரிமலவாயு உண்டோ
என் உடம்பில்?
கேட்டுக் கொண்டதுண்டு
நானே என்னிடம்!!
ஏனெனில்,
மூக்கினூடே நுழையும்
பிராண வாயு
வயிற்றுக்கு செல்லும்
பாதை மூடிக் கிடப்பதைக் கண்டு
வெளியேறி விடுமோ?
மனிதன் என்ற பெயரன்றி
வேறெதுவும் எனக்கில்லை!!
எனக்கான உணவையும் சேர்த்தே
உண்டு விடுகிறார்கள் யாரோ
இப்புவிதனில்!!
விரயமாகும் ஒவ்வொரு
சோற்றுப்பருக்கையிலும் என் பெயர்
எழுதி அழிக்கப்பட்டு விட்டது!!!

1 comment:

  1. awesome ya.. its very true. try publish this poem in magazines.. many can change if realized the meaning of the this poem.

    ReplyDelete