எனது கவிதை
யாரோ ஒருவருக்குப் பிடித்து விடுகின்றது.
எங்கோ எவரையோ குழப்பி விடுகின்றது..
ஏனோ சிலருக்கு எரிச்சலூட்டுகின்றது..
பலரால் அலட்சியப்படுத்தப்படுகின்றது..
மறுக்கப்பட்டிருக்கு வெறுக்கப்பட்டிருக்கு
எது எப்படி இருப்பினும்
எனது கவிதை
தன் தன்மை இழக்காமல்
வாழ்கின்றது
என்னைப் போன்றே :-)
No comments:
Post a Comment