எனது கவிதை
யாரோ ஒருவருக்குப் பிடித்து விடுகின்றது.
எங்கோ எவரையோ குழப்பி விடுகின்றது..
ஏனோ சிலருக்கு எரிச்சலூட்டுகின்றது..
பலரால் அலட்சியப்படுத்தப்படுகின்றது..
மறுக்கப்பட்டிருக்கு வெறுக்கப்பட்டிருக்கு
எது எப்படி இருப்பினும்
எனது கவிதை
தன் தன்மை இழக்காமல்
வாழ்கின்றது
என்னைப் போன்றே :-)
Tuesday, 22 May 2012
Sunday, 13 May 2012
மழலையின் புன்னகை போதும்!!
எதுகை மோனை வேண்டாம்;
என் உணர்வைச் சொல்ல
சில வார்த்தைகள் போதும்.
இலக்கணங்கள் வேண்டாம்;
என் மெளனத்தை விளக்கும்
மொழி ஒன்று போதும்.
நயம் மிகுந்த கவிதைகள் வேண்டாம்;
என் கண்ணீரை மொழிபெயர்க்கும்
சொற்கள் போதும்!!!
இது எதுவும் சாத்தியம் இல்லை எனில்
எனக்கு மழலையின் புன்னகை போதும்!
என் உணர்வைச் சொல்ல
சில வார்த்தைகள் போதும்.
இலக்கணங்கள் வேண்டாம்;
என் மெளனத்தை விளக்கும்
மொழி ஒன்று போதும்.
நயம் மிகுந்த கவிதைகள் வேண்டாம்;
என் கண்ணீரை மொழிபெயர்க்கும்
சொற்கள் போதும்!!!
இது எதுவும் சாத்தியம் இல்லை எனில்
எனக்கு மழலையின் புன்னகை போதும்!
Thursday, 10 May 2012
மன்னிக்க வேண்டும் மகாகவி!!
"ஜாதிகள் இல்லையடி பாப்பா"
மன்னிக்க வேண்டும் மகாகவி!!
உங்களின் இந்த விதிக்கு
விலக்கு உண்டு!!
கீழ்ஜாதி என்ற ஒன்று
உண்டு இப்புவிதனில்!!
சின்னஞ்சிரு கிளி அவள்
சித்திரப் பதுமை சிலை!!
பிரபஞ்சம் சுருங்கி போகும்
அவள் பிஞ்சு விரல்தனில்!!
இரண்டொரு பற்கள் என்றாலும்
அவள் சிரிக்கையில்
இதயம் நிறைந்து போகும்!!
2 வயது பெண்தேவதை அவள்!!
நான் கண்டது அவளை
ஓர் அன்பு இல்லத்தில்!!
நேர்முகமாய் காண இயலவில்லை
அவளால்!!!
தலை சாய்த்து கண்சிமிட்டி
கொஞ்சும் புன்னகையில்
வலம் வர வேண்டிய தேவதை
தலை சாய்ந்த படியே
கழிக்க வேண்டும் தன் வாழ்நாளை!
தலையிலிருந்து கன்னம் வரை
நீண்டு வடு ஒன்று!!
காயத்தின் காரணம் கேட்டேன்!
ஒரு நொடியில் உயிரை இழந்தேன்!!
இரவு நேர பசிக்கு
குழந்தை அவள்
அழுத காரணத்திற்காக
சுவற்றில் எறியப்பட்டாள்!
எறியப்பட்ட கணம் எப்படி
துடித்திருப்பாளோ இறைவா!!
எறிந்தவன் எவனுமில்லை
தந்தை என்ற முகமூடிக்குள்
ஒரு ராட்ஷசன்!!!
அவன் தீண்டதகாதவன்!!!
அவன் ஒரு கீழ்ஜாதி மனிதன்!!!
மிருகமென ஒப்பிட்டு
மிருக இனத்தைக் ஈனப்படுத்தாதீர்!!
பூவொன்றை சிதைத்த
அவனைக் கொசுக் கூட அண்டாது!
ஏனெனில்,
அவன் உதிரம் தீண்டதகாதது!!
எனவே,
மன்னிக்க வேண்டும் மகாகவி!!
கீழ்ஜாதி என்ற ஒன்று
உண்டு இப்புவிதனில்!!
"இது கற்பனையல்ல நிஜம்!!!"
மன்னிக்க வேண்டும் மகாகவி!!
உங்களின் இந்த விதிக்கு
விலக்கு உண்டு!!
கீழ்ஜாதி என்ற ஒன்று
உண்டு இப்புவிதனில்!!
சின்னஞ்சிரு கிளி அவள்
சித்திரப் பதுமை சிலை!!
பிரபஞ்சம் சுருங்கி போகும்
அவள் பிஞ்சு விரல்தனில்!!
இரண்டொரு பற்கள் என்றாலும்
அவள் சிரிக்கையில்
இதயம் நிறைந்து போகும்!!
2 வயது பெண்தேவதை அவள்!!
நான் கண்டது அவளை
ஓர் அன்பு இல்லத்தில்!!
நேர்முகமாய் காண இயலவில்லை
அவளால்!!!
தலை சாய்த்து கண்சிமிட்டி
கொஞ்சும் புன்னகையில்
வலம் வர வேண்டிய தேவதை
தலை சாய்ந்த படியே
கழிக்க வேண்டும் தன் வாழ்நாளை!
தலையிலிருந்து கன்னம் வரை
நீண்டு வடு ஒன்று!!
காயத்தின் காரணம் கேட்டேன்!
ஒரு நொடியில் உயிரை இழந்தேன்!!
இரவு நேர பசிக்கு
குழந்தை அவள்
அழுத காரணத்திற்காக
சுவற்றில் எறியப்பட்டாள்!
எறியப்பட்ட கணம் எப்படி
துடித்திருப்பாளோ இறைவா!!
எறிந்தவன் எவனுமில்லை
தந்தை என்ற முகமூடிக்குள்
ஒரு ராட்ஷசன்!!!
அவன் தீண்டதகாதவன்!!!
அவன் ஒரு கீழ்ஜாதி மனிதன்!!!
மிருகமென ஒப்பிட்டு
மிருக இனத்தைக் ஈனப்படுத்தாதீர்!!
பூவொன்றை சிதைத்த
அவனைக் கொசுக் கூட அண்டாது!
ஏனெனில்,
அவன் உதிரம் தீண்டதகாதது!!
எனவே,
மன்னிக்க வேண்டும் மகாகவி!!
கீழ்ஜாதி என்ற ஒன்று
உண்டு இப்புவிதனில்!!
"இது கற்பனையல்ல நிஜம்!!!"
Friday, 4 May 2012
வெண்ணிலவு!!
வெள்ளை வான்முகில்களுக்கு
மத்தியில் அழகாய் காட்சியளிக்கிறது
வெண்ணிலவு!!
இன்று
நிறைய கவிதையும் காதலும் பிறந்திருக்கலாம்
மத்தியில் அழகாய் காட்சியளிக்கிறது
வெண்ணிலவு!!
இன்று
நிறைய கவிதையும் காதலும் பிறந்திருக்கலாம்
இரவு!
இரவு கவிதைக்குள் ஓர் ஓவியம்;
ஓவியத்திற்குள் ஒரு கவிதை...
தினந்தோறும் ரசித்த போதும்
திகட்டவில்லை; சலித்துப் போகவும் இல்லை.
இரவு நேரத்தில்
பிடித்த பாடல்களைக் கேட்கையில்
இன்னும் பிடித்துப் போகிறது
அந்த நிலவும் இந்த இரவும்...
ஓவியத்திற்குள் ஒரு கவிதை...
தினந்தோறும் ரசித்த போதும்
திகட்டவில்லை; சலித்துப் போகவும் இல்லை.
இரவு நேரத்தில்
பிடித்த பாடல்களைக் கேட்கையில்
இன்னும் பிடித்துப் போகிறது
அந்த நிலவும் இந்த இரவும்...
நிலா, நட்சத்திர இரவு!
இரவில் தூங்க வேண்டும்
என நியதியைப் படைத்தவன்
நிலவையும் கண்சிமிட்டும் நட்சத்திரங்களையும்
பாராமல் இருந்திருப்பான்!
என நியதியைப் படைத்தவன்
நிலவையும் கண்சிமிட்டும் நட்சத்திரங்களையும்
பாராமல் இருந்திருப்பான்!
Subscribe to:
Posts (Atom)
