Thursday 10 May 2012

மன்னிக்க வேண்டும் மகாகவி!!

"ஜாதிகள் இல்லையடி பாப்பா"
மன்னிக்க வேண்டும் மகாகவி!!
உங்களின் இந்த விதிக்கு
விலக்கு உண்டு!!
கீழ்ஜாதி என்ற ஒன்று
உண்டு இப்புவிதனில்!!

சின்னஞ்சிரு கிளி அவள்
சித்திரப் பதுமை சிலை!!
பிரபஞ்சம் சுருங்கி போகும்
அவள் பிஞ்சு விரல்தனில்!!
இரண்டொரு பற்கள் என்றாலும்
அவள் சிரிக்கையில்
இதயம் நிறைந்து போகும்!!
2 வயது பெண்தேவதை அவள்!!

நான் கண்டது அவளை
ஓர் அன்பு இல்லத்தில்!!
நேர்முகமாய் காண இயலவில்லை
அவளால்!!!
தலை சாய்த்து கண்சிமிட்டி
கொஞ்சும் புன்னகையில்
வலம் வர வேண்டிய தேவதை
தலை சாய்ந்த படியே
கழிக்க வேண்டும் தன் வாழ்நாளை!
தலையிலிருந்து கன்னம் வரை
நீண்டு வடு ஒன்று!!
காயத்தின் காரணம் கேட்டேன்!
ஒரு நொடியில் உயிரை இழந்தேன்!!

இரவு நேர பசிக்கு
குழந்தை அவள்
அழுத காரணத்திற்காக
சுவற்றில் எறியப்பட்டாள்!
எறியப்பட்ட கணம் எப்படி
துடித்திருப்பாளோ இறைவா!!
எறிந்தவன் எவனுமில்லை
தந்தை என்ற முகமூடிக்குள்
ஒரு ராட்ஷசன்!!!

அவன் தீண்டதகாதவன்!!!
அவன் ஒரு கீழ்ஜாதி மனிதன்!!!
மிருகமென ஒப்பிட்டு
மிருக இனத்தைக் ஈனப்படுத்தாதீர்!!
பூவொன்றை சிதைத்த
அவனைக் கொசுக் கூட அண்டாது!
ஏனெனில்,
அவன் உதிரம் தீண்டதகாதது!!
எனவே,
மன்னிக்க வேண்டும் மகாகவி!!
கீழ்ஜாதி என்ற ஒன்று
உண்டு இப்புவிதனில்!!
"இது கற்பனையல்ல நிஜம்!!!"

2 comments: