Sunday 13 May 2012

மழலையின் புன்னகை போதும்!!

எதுகை மோனை வேண்டாம்;
என் உணர்வைச் சொல்ல
சில வார்த்தைகள் போதும்.
இலக்கணங்கள் வேண்டாம்;
என் மெளனத்தை விளக்கும்
மொழி ஒன்று போதும்.
நயம் மிகுந்த கவிதைகள் வேண்டாம்;
என் கண்ணீரை மொழிபெயர்க்கும்
சொற்கள் போதும்!!!
இது எதுவும் சாத்தியம் இல்லை எனில்
எனக்கு மழலையின் புன்னகை போதும்!

2 comments:

  1. இந்த கவிதை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது!

    ReplyDelete