என் வாழ்வில் தவறாமல் நிகழும் ஒரு சம்பவம் விடியல். உறக்கம் கலைந்து என் விழிகளைத் திறந்தவுடன் விடிந்து விடுகிறது என் வானம். ஒவ்வொரு விடியலும் வெவ்வேறான மனோபாவங்களுடனே விடிகின்றது! ஆசைகளும் எதிர்ப்பார்ப்புக்களும் தழும்ப, கனவினை மறுத்து ஏங்கி தவித்த விடியல்கள் உண்டு.. சுமையான நிஜங்களைத் தூர எறிந்து விட்டு கனவுகளில் ஒளிந்து கொண்ட விழிகள் ஏற்க மறுத்த விடியல்களும் உண்டு! கண்களில் ஓரம் ஒட்டிக் கொண்டிருந்த உறங்கங்களில் விடிந்தும் விடியாத விடியல்கள் உண்டு. எந்த வகை விடியல் என்றாலும் தவறாமல் என் வாழ்வில் நிகழும் ஒரு சம்பவம் விடியல்.
Wednesday, 21 March 2012
Friday, 2 March 2012
மெல்லிய கயிறு.
சில நிதர்சனமான உண்மைகள்
கொடுக்கும் வலிகளின் தன்மையை
விவரிக்க முடியும் எனில்
கண்ணீர் துளிகள் படைக்கப்படாமல்
இருந்திருக்கக் கூடுமோ?
சப்த நாடியும் ஒடுங்கி
அமர்ந்திருக்கும் வேளையில்
வெறித்து பார்க்கும் விழிகளைச்
சில சமயம் கண்ணீர் கூட
நனைத்திட மறுத்து விடுகின்றதே?
யோசனையே இல்லாமல்
யோசித்துக் கொண்டிருக்கும் கணங்கள்
கனத்து நிற்பது
அந்த இதயம் மட்டுந்தானே அறியும்!!
தோல்வி, மரணம், துரோகம், ஏமாற்றம்
இப்படி இடிந்து விழுகையில்
இதயம் நொறுங்கினாலும்
உள்ளத்தின் ஏதோ ஒரு மூலையில்
தொங்கி கொண்டே இருக்கின்றது
ஒரு மெல்லிய கயிறு.
புதையாமல் நாம்
அதை பிடித்துக் கொண்டே
மேலேறி விடுகின்றோம்!!
கொடுக்கும் வலிகளின் தன்மையை
விவரிக்க முடியும் எனில்
கண்ணீர் துளிகள் படைக்கப்படாமல்
இருந்திருக்கக் கூடுமோ?
சப்த நாடியும் ஒடுங்கி
அமர்ந்திருக்கும் வேளையில்
வெறித்து பார்க்கும் விழிகளைச்
சில சமயம் கண்ணீர் கூட
நனைத்திட மறுத்து விடுகின்றதே?
யோசனையே இல்லாமல்
யோசித்துக் கொண்டிருக்கும் கணங்கள்
கனத்து நிற்பது
அந்த இதயம் மட்டுந்தானே அறியும்!!
தோல்வி, மரணம், துரோகம், ஏமாற்றம்
இப்படி இடிந்து விழுகையில்
இதயம் நொறுங்கினாலும்
உள்ளத்தின் ஏதோ ஒரு மூலையில்
தொங்கி கொண்டே இருக்கின்றது
ஒரு மெல்லிய கயிறு.
புதையாமல் நாம்
அதை பிடித்துக் கொண்டே
மேலேறி விடுகின்றோம்!!
Thursday, 23 February 2012
வினாடிகளின் விலாசங்கள்
எழுத்துக்களைத் தாங்கும் நோட்டுப்புத்தகங்களுக்குப் புரியும் அந்த கீறல்களின் வலி. வலி மிகுந்த அனுபவங்கள் கற்றுக் கொடுத்த பாடங்கள் மிகவும் வலியது!! எத்தனை மரணங்கள் அடைந்து மீண்டும் ஜனனங்கள் எடுத்திருப்பேன்? அந்த ஒவ்வொரு ஜனனங்களில்தான் எத்தனை எத்தனை மரண வலிகள்!! கடந்து வந்த பாதைகள் நாம் பயணிக்கும் பாதைகளைச் செம்மைப்படுத்திட வேண்டும். தூரத்தில் காத்திருக்கும் பாதையின் நீளம் எவரும் அறியார்.
முட்கள் தைக்கும் பாதைகளில் ஆங்காங்கே சில பூக்களும் தூவப் பட்டிருக்கும் என்பதை அவப்பொழுது நான் உணர்ந்திருக்கிறேன். விழுந்து பின் முட்டி மோதி எழுகையில்தான் மனித வாழ்வின் மகத்துவம் அடங்கியுள்ளது என்று நம்புகின்றேன். சில சமயங்களில் தோற்பதன் மூலம்தான் வெற்றி அடைய முடியும் என்பதையும் உணர்ந்திருக்கிறேன். சில வெற்றிகளில் தோல்வியும் அடைந்திருக்கிறேன். எது எப்படி இருப்பினும் நான் நானாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் நானாகவே இருக்கவும் விரும்புகிறேன். என் இறந்த காலம் இறந்த பின்னும் நினைவுகளாய் எனக்கு மிகச் சிறந்த பாடங்களாய் என்னுடன் பயணிக்கின்றது. எதிரே காத்திருக்கும் என் எதிர்காலம் விடுகதையாய் வெறும் கனவுகளின் பிம்பங்களாய் என்னுடன் நிழலாடிக் கொண்டிருக்கிறது. என் இதயத்துடன் துடிக்கும் இந்நொடியோ என்னை வாழ அழைக்கின்றது. நினைவுகளையும் கனவுகளையும் சுமந்து கொண்டே கழிகின்றது என்னைச் சலிக்காமல் சுமக்கும் நிஜமான இவ்வினாடி...
அன்புடன்,
கோகிலா கன்னியப்பன்.
Saturday, 18 February 2012
சில மெளனங்கள் வார்த்தைகளாய்!!
நாகரீகம் பார்த்து கூறாமல்
விட்டுப் போன வார்த்தைகள்
அவப்பொழுது கொடுக்கின்றன
சாட்டை அடிகள்..
ஏனென்று தெரியாமல்
என்னவென்று புரியாமல்
புழுங்கி துடித்து
பின்னொரு நாள்
எதுவும் நமக்கு சாதகமானது இல்லை
என்றான பின்,
கண்ணீர் சொரிந்து
காலம் இழுத்துச் செல்ல
அவப்பொழுது ஏக்கமாய்
திரும்பி பார்த்து
மீண்டும் பயணித்த போதும்
நாகரீகம் பார்த்து கூறாமல்
விட்டுப் போன வார்த்தைகள்
அவப்பொழுது கொடுக்கின்றன
சாட்டை அடிகள்..
சில மெளனங்களை
நிரப்பி இருந்தால்??
விட்டுப் போன வார்த்தைகள்
அவப்பொழுது கொடுக்கின்றன
சாட்டை அடிகள்..
ஏனென்று தெரியாமல்
என்னவென்று புரியாமல்
புழுங்கி துடித்து
பின்னொரு நாள்
எதுவும் நமக்கு சாதகமானது இல்லை
என்றான பின்,
கண்ணீர் சொரிந்து
காலம் இழுத்துச் செல்ல
அவப்பொழுது ஏக்கமாய்
திரும்பி பார்த்து
மீண்டும் பயணித்த போதும்
நாகரீகம் பார்த்து கூறாமல்
விட்டுப் போன வார்த்தைகள்
அவப்பொழுது கொடுக்கின்றன
சாட்டை அடிகள்..
சில மெளனங்களை
நிரப்பி இருந்தால்??
மீண்டும் அந்த பாடல் ஒலிக்கையில்...
சில பாடல்களில் தொலைவது
நம் மனம் மட்டுமல்ல
சில காயங்ளும்தான்.
சில பாடல்களில் விழிப்பது
நினைவுகள் மட்டுமல்ல
சில வலிகளும்தான்..
நம் மனம் மட்டுமல்ல
சில காயங்ளும்தான்.
சில பாடல்களில் விழிப்பது
நினைவுகள் மட்டுமல்ல
சில வலிகளும்தான்..
அந்த சில வார்த்தைகள்!
ஒரு கணமேனும்
அல்லது ஒரு நொடியேனும்
நாம் வார்த்தைகளைத்
தேடி தோல்வியுற்றதுண்டு!
தன் காதலின் ஆழத்தை
உணர்த்த முற்படுகையில்..
காயத்தின் வலியை
விளக்க முயலுகையில்..
வழியும் கண்ணீரின் காரணத்தைச்
சொல்ல விரும்புகையில்..
பிரிவின் துயரத்தைக்
கூற நினைக்கையில்..
இப்படி
ஒரு கணமேனும்
அல்லது ஒரு நொடியேனும்
நாம் வார்த்தைகளைத்
தேடி தோல்வியுற்றதுண்டு!
அல்லது ஒரு நொடியேனும்
நாம் வார்த்தைகளைத்
தேடி தோல்வியுற்றதுண்டு!
தன் காதலின் ஆழத்தை
உணர்த்த முற்படுகையில்..
காயத்தின் வலியை
விளக்க முயலுகையில்..
வழியும் கண்ணீரின் காரணத்தைச்
சொல்ல விரும்புகையில்..
பிரிவின் துயரத்தைக்
கூற நினைக்கையில்..
இப்படி
ஒரு கணமேனும்
அல்லது ஒரு நொடியேனும்
நாம் வார்த்தைகளைத்
தேடி தோல்வியுற்றதுண்டு!
ஜன்னலின் வழியே!
என்னுள் சுருங்கி
அறையின் ஒரு மூலையில்
நான் முடங்கி கிடக்கையில்
வெளியே விசாலமாய்
தன் கைகளை விரித்து
அழைத்திடும் வானத்தினைக்
கண்டேன் ஜன்னலின் வழியே!
அறையின் ஒரு மூலையில்
நான் முடங்கி கிடக்கையில்
வெளியே விசாலமாய்
தன் கைகளை விரித்து
அழைத்திடும் வானத்தினைக்
கண்டேன் ஜன்னலின் வழியே!
Subscribe to:
Posts (Atom)
