ஒரு கணமேனும்
அல்லது ஒரு நொடியேனும்
நாம் வார்த்தைகளைத்
தேடி தோல்வியுற்றதுண்டு!
தன் காதலின் ஆழத்தை
உணர்த்த முற்படுகையில்..
காயத்தின் வலியை
விளக்க முயலுகையில்..
வழியும் கண்ணீரின் காரணத்தைச்
சொல்ல விரும்புகையில்..
பிரிவின் துயரத்தைக்
கூற நினைக்கையில்..
இப்படி
ஒரு கணமேனும்
அல்லது ஒரு நொடியேனும்
நாம் வார்த்தைகளைத்
தேடி தோல்வியுற்றதுண்டு!
No comments:
Post a Comment