Wednesday 1 August 2012

நினைவுகள் என்பது...



இந்த மனித வாழ்வின் மிச்சம் வெறும் நினைவுகள் மட்டுமே! எலும்புக்கூடாகி கிடக்கும் மனிதர் ஒருவர் வாழ்வது நினைவுகளில் மட்டுமே. இந்த நினைவுகளுக்குத்தான் எவ்வளவு வலிமை? வதைக்கவும் செய்கின்றது; நம்மை வாழவும் வைக்கின்றது. நினைவுகள் என்பதுதான் என்ன? மகிழ்ந்து திளைத்திருக்கையில் உள்ளந்தனில் பெருக்கெடுத்து ஓடும் இன்பம்தான் நினைவுகளோ? எனது பார்வையில் நினைவுகள் கண்ணீரின் ஈரத்தில் கூட எழுதப்படலாம். கரைதனை தொட்டு...
தொட்டுச் செல்லும் கடல் அலைகளின் ஈரத்தில் நனைந்திருக்கின்றது கரையின் அழகிய நினைவுகள்! ஆத்மார்த்தமான உணர்வில் உண்மையான அன்பில் நகரும் ஒவ்வொரு நொடியும் நம் இதயக்கூட்டில் சேமிக்கப்படும் நினைவுகளே. தாயிடம் அடி வாங்கி அழுத கணங்கள் இன்று நாம் நினைத்து மகிழ்ந்திடும் நினைவுகளாய் இல்லையா? அன்றைய கண்ணீர்துளிகளின் ஈரத்தில் நிறைந்திருக்கின்றது இன்றைய அழகிய நினைவுகள்!

நினைவுகள் என்பது இன்பத்தின் எல்லையில் சேகரிக்கப்படுவது அல்ல. மனதின் ஆழ்நிலை உணர்வில் கோர்க்கப்படுவது!

No comments:

Post a Comment