Wednesday 1 February 2012

வந்து விடவா விண்மீனே?

தூரமாய் அந்த சின்னஞ்சிறு நட்சத்திரம்
கண் சிமிட்டி கூப்பிடுது என்னை.
வந்து விடவா விண்மீனே?
நிலவொளியில் கண்ணாமூச்சி ஆடுவோம்
களைத்துப் போகையில் முகில்களை
அள்ளி எடுத்து முகம் துடைத்துக் கொள்வோம்.
உலகம் தன்னை மறந்து
விழி மூடி உன் மடியினில்
கொஞ்சம் துயில் கொள்ள
வந்து விடவா விண்மீனே?

No comments:

Post a Comment