Thursday 2 February 2012

புரிதல் என்பது...

ஓராயிரம் வார்த்தைகள் கோர்த்து
பல நிமிடங்களைத் தொலைத்து
கூற வந்த வாக்கியங்கள்
ஊனமாகி பின் மறைந்து போகையில்
தேங்கி கிடந்த கண்ணீரில்
என்னை தேக்கி வைக்க
மெருதுவாய் என் கன்னம் வருடி
உன் விரல்களை என் விரல்களின் மேல்
வைத்து நீ பார்த்த
அந்த பார்வையில்
வழிந்தோடிய கண்ணீர்த்துளிகளில்
நானும் கொஞ்சம் சிந்தி நின்றேன்.
புரிதல் என்பது வார்த்தைகளில் இல்லை.
உணரும் உள்ளந்தனில் நிரம்பி கிடக்கு.

No comments:

Post a Comment