உன்னுடன் இணைந்து நடக்கையில்
என் சுவடுகள் சொர்க்கத்தில்
பதிகின்றன.
உன்னுடன் கதைக்கையில்
என் கால நேரம் சுருங்கி
விடுகின்றது!
உன் சிரிப்பினில்
நான் மலர்கின்றேன்.
உன் கண்ணீரில்
நான் கரைகின்றேன்.
ஒரு கோடி பெண்களைப்
பார்த்தும் சலனம் இல்லாமல்
சுவாசிக்கின்றேன்!
புகைப்படம் என்றாலும்
உன் முகம் பார்க்கையில்
சேமித்து வைத்த என்னை
செலவழித்து விடுகிறேன்!
உன் நினைவுகளில் தொலைகின்றேன்.
உன் கனவுகளில் கொஞ்சம் கலைந்து போகின்றேன்.
காணா பொழுதுகளில் கவிஞன் ஆகின்றேன்.
காணும் நொடிகளில் ஓவியன் ஆகின்றேன்.
உன் பார்வைகளில் என்னை காண்கிறேன்.
பெண்ணே,
வாழ்ந்து விட்டு மடிகின்றேனே,
உன் உயிரில்
ஒரு துளியாய் சிந்தி
தேங்கி நின்று
அதன் ஈரம் உன்னை நனைத்துக் கொண்டே
இருக்கும் படி
உன்னுடன் ஒரு வாழ்க்கை
வாழ்ந்து விட்டு மடிகின்றேனே!
No comments:
Post a Comment