Wednesday 15 February 2012
கண்ணோடு சில கனவுகள்..
கண்ணோடு சில கனவுகள்..
கைக்கு எட்டா தூரம் என்றபோதும்
அனைவரின் மனதோடும்
நொடிக்கொரு முறை
எட்டிப் பார்க்கின்றன
சில கனவுகள்.
வானவில்லின் வர்ணங்களைப்
பார்த்து விட ஏங்கும்
கண்பார்வையற்றோரின் கண்ணோடு
விழித்திருக்கும் கனவுகள்.
தன் மழலையின் மொழியினை
சில நொடியேனும் கேட்டு விடத்
துடிக்கும் தாயின் செவிகளில்
சத்தமாக ஒலித்துக் கொண்டே
இருக்கும் கனவொன்று!
தான் காதலிக்கும் பெண்ணின் காதோடு
" I Love You"
சொல்லி விட மருகும்
வாய் பேச இயலாத
காதலனின் உதடுகளில்
உரைத்துக் கொண்டே இருக்கும்
காதல் கனவுகள் பல..
இப்படி நாம் அலட்சியப்படுத்தும்
நிஜங்கள் பல
சிலர் ஏங்கித் தவிக்கும்
வெறும் கானல் கனவுகள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment