Friday, 17 February 2012

தொற்றிக் கொள்ளும் சில நினைவுகளும் உணர்வுகளும்..

என்றோ, எப்பொழுதோ,
ஏதோ ஓர் உணர்வில்
எழுதிய கவிதை
இன்று
கையில் கிடைத்தது
கசங்கிய நிலையில்!
செல்லரித்த புகைப்படங்களில்
வாழும் நினைவுகளைப் போலவே
கசங்கிக் கிடந்த காகிதத்தின் ஓரத்தில்
ஒட்டிக் கொண்டு இருந்தது
என் உணர்வுகளும்..

No comments:

Post a Comment